Thursday, April 30, 2015

Kalaingar Madal 5: On Uthama Villain movie controversy...

உடன்பிறப்பே,

தம்பி கமலஹாசனின் படம் "உத்தமவில்லன்" நாளை வெளிவரவிருக்கிறது. இதை தடை செய்ய ஆரிய சக்திகள் முடிவு செய்திருக்கின்றன. இதை கழகத்தின் திராவிட சகோதரர்கள் ஒன்று திரண்டு வெகுண்டெழுந்து முறியடிக்கவேண்டும்.

இது என்ன விஸ்வரூபமா, உயிருக்கு பயந்து நான் மௌனம் காக்க ? இந்துக்கள் சகிப்புத்தன்மை உள்ளவர்கள் என்பது அறிந்து தந்தை பெரியார் வழியில், அனைவருக்கு அண்ணா நாமம் போடும் கழகம் இதை கைவிடலாமா ?

இப்போதுதான் நமது தமிழ் மொழி, இன, குல மானங்களையும், வீரங்களையும் காட்டும் தருணம் !

தம்பி கமலஹாசன் கழகக்கொள்கையிலிருந்து சற்றும் மாறாதவர். மனைவியிருந்தும் துணைவியரும்/கலவியரும் வாழ்வுக்கு தேவை என்பதை எப்போதோ உணர்ந்த பெருந்தகையல்லவே அவர் ?

"உத்தமவில்லன்" என்ற பெயரால் ஒருவேளை இது எமது சுயசரிதையோ என்று எண்ணி கலங்கிடாதே. இது நமக்கு முற்றிலும் இணக்கமான இந்து மதத்தை மட்டுமே பழிக்கும் படமென்று தம்பி விளக்கமளித்துள்ளார் எமக்கு ?

நேபாளத்தில் இயற்கையன்னையின் சீற்றத்தை எதிர்கொண்டவர் ஆதித்தமிழனை மதத்தால் அடிமையாக்கியர் என்பதை நினைவில் கொண்டு, கழகத்துக்கு திரும்பட்டும் -- உனது பொற்கிழி !!

கடைத்தொண்டன்

கட்டுமரம்.

No comments:

Post a Comment