Sunday, May 10, 2015

Kalainga madal 6: On Jaya judgment in Karnata HC...

உடன்பிறப்பே,

இன்று நாள், தமிழகத்துக்கு பொன்னாளோ, மண்-நாளோ என்பதை கர்நாடக நீதியரசர்தான் தீர்மானிக்கவேண்டிய கேவலமான நிலையில் கழகம் இருப்பதை, காவிரிக்கு கையேந்தும் தமிழர்கள் நினைவு கொண்டு சிந்திக்கவேண்டும்.

நீதியரசர் - நீதியின் வழி நடந்து, அதை நிலைநாட்டி, மனுநீதி வழி நடப்போரை தண்டிப்பதே ஆதி-தமிழனின் இச்சை, கழகத்தின் ஒரே மூச்சு.

அம்மையார் குவித்ததோ பெரும் சொத்து, ஆனால் என்னிடம் உள்ளது வெறும் தயிர் மத்து
என்று பொய்யுரைத்ததை,

பேரியத்தின் சதியை மேரியின் வழி நடக்கும் உத்தமர் - நீதியரசர் தவறே என்றபிறகும்,
மேல்முறையிட்டு, வேல்மறை வழிபடும், குமாரசாமி வந்தபோதே எமக்கு சந்தேகமே.

ஆனால், "மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு" என்ற கொள்கை காரணமாக அடக்கம் கொண்டுள்ளதை, முடக்கம் என்று கயவர் சொல்வதை நம்பிடாதே.

எமது எதிர்பார்ப்பு, நல் தீர்ப்பு ! அது தமிழத்தை தர்மபுரியாக்குமா அன்றேல் மர்மபுரியாக்குமா என்று பார்க்க பொறுமை கொள்.

தமிழகத்து (கழகத்து) எதிர்காலம் குறித்து கவலையுடன்,
கடைத்தொண்டன்

கட்டுமரம்.

No comments:

Post a Comment