Thursday, May 28, 2015

Kalaignar madal: On RKNagar Bye Election..

உடன்பிறப்பே,

பெரும் ஆய்வுக்குப்பிறகு, வரும் இடைத்தேர்தல், கெடுமதி ஆட்சியாளர்களின் கடைத்தேர்தல் என்றுணர்ந்ததாலேயே, கழகம் இதை புறக்கணிக்க முடிவு செய்துள்ளது. இதை எதோ இந்த இனமானத்தமிழனின் புறமுதுகிட்டு ஓடிடும் செயல் என்று ஊடங்களின் வஞ்சிக்கும் செய்திகளை நீ நம்பி வெம்பிவிடாதே.

ரா.கி.நகரில் ஏன் போட்டியிடவில்லை என்று புலம்பும் கெடுமதியாளர்கள், பெண்ணாகரம் என்ற சரித்திரசான்றை மறந்தது அவர்தம் கயமை அன்றி வேறல்லவே ! இடைதேர்தல்களை, நாம் ஆட்சியில் இருக்கும்போது மட்டுமே சந்திக்கவேண்டும் என்று ஆதித்தமிழனுக்கும், அம்மையாருக்கும் கற்றுத்தந்தனவல்லவா இந்த கடைத்தொண்டன் ? அதை முற்றிலும் மறந்து இன்று கொக்கரிக்கும் அம்மையாரின் நக்கலை நீ இனம் கண்டுகொள்ள வேண்டும்.

இருதலைக்கொள்ளி எறும்பு போல் நாம் இருப்பது குடும்பத்திலுள்ள இரு தலைகளில் எது பெருந்தலை என்ற கேள்விக்கு விடை காணமுடியாமல் மறத்தமிழன் இருப்பதால்தானே ! இதை அறியாதோர் புலம்புவது அரை வேக்காட்டுத்தனமே!

ஆரியசக்திகள் இணைத்தளித்தில் ஒன்று கூடி, செய்யும் பொய் பிரச்சாரங்களை நீ கண்டுகொள்ளவேண்டும். போட்டியிடாவிட்டாலும், நீதிகாக்க போராடும் கழகத்துக்கு நிதி இன்றியமையாதது
என்று தெரிந்து நீ இன்றே
பொற்கிழி அளிப்பது, முற்றிலும் நன்றே
என்று நன்றி தெரிவிப்பது எம் கடமை அன்றே
அன்றி வேறில்லை.

இடைத்தேர்தல் கொடுங்கோலரின் கடைத்தேர்தல் !
நிரந்தர ஆட்சி, எமது மாட்சி....
நிரந்தர நிதி குவிப்பு, எமக்கு பெருமுவைப்பு,

கடைத்தொண்டன்,

கட்டுமரம்.

No comments:

Post a Comment