Monday, May 11, 2015

Kalaignar Madal #7: On jaya verdict shock....

உடன் பிறப்பே,

நேற்றேழுதிய மடல் முற்றிலும் மை காயுமுன்னே, சற்றிலும் எதிர்பாராமல் இன்னொரு கயமை !!!

வந்தது தீர்ப்பா, தீர்வினையா அல்லது கழகத்துக்கு வந்த பெரும் வினையா என்று நீ அச்சப்படுவாயோ என்று எமக்கு எழுந்த கூச்சத்தால் எழுதிய மடல் இது.

திராவிடம் அனைத்தும் ஓரினம் என்று ஆரம்பித்த கழகம் இன்று வேரிடமாகி, திக்கி திளைத்து திசைமாறி தத்தளித்து அலைகிறதோ என்ற அச்சம் தோன்றுகிறது. தமிழினம் வேறு திராவிடவினம் வேறு என்று தீய சக்திகள் சொல்லுக்கு, வில்லு பாட்டுக்கு ஆடும் மதிகள் போல, அதி திராவிடர் சிலரே, நீதியரசர்களாக கயமை செய்வதை எப்படி (குடும்பம்) கழகம் தாங்கும் ?

ஐயகோ ! எதையும் தாங்கும் இதயம் இன்றிருந்தால் மீண்டும் தனது உறக்கத்தை வென்று போராட்டம் தொடங்கி, அம்மையார் கொக்கரிப்பதை வீரவாட்டம் செய்து அடக்கியிருக்காதா ? அத்தகைய கழகமேங்கே, ஐம்பெரும் தலைவரெங்கெ ?

இந்த இன்னல்களுக்கிடையே, அம்மையாரின் எடுபிடிகள் செய்த அலங்கோலங்களை நினைவு கொள்வோம், ஏழையின் சிரிப்பினிலே இறைவனை கண்ட கழகம், பால்குடங்களையும், காவடிகளையும், பல்வேறு தேரடிகளுக்கருகே கண்ட கேவலம் அனைவருக்கும் தெரியும். மசூதிகளையும், தேவாலயங்களையும் மட்டுமே அணுகியிருந்தால் அதிலுள்ள நியாயம் எமக்கு முழுவதுமாக புரிந்திருக்கும்.

மீண்டும், கொல்வோம் மறைகளை,
நினைவுகொள்வோம் கழக சூளுரைகளை.
இந்து எதிர்ப்பு மட்டுமே எமது சக்தி,
குடும்பத்துக்கு பக்தி
இதுவே கழகத்தின் அரசியல் யுக்தி,
இதனாலேயே இன்னாள் வரை எமக்கு முக்தி

என்பது உலகறிந்ததல்லவே !

மீண்டும் தமிழன் சோற்றால் அடித்த பிண்டமான அலங்கோலம், கண்டு கொக்கரிப்பவரின் குதூகலம், கேவலம்.

இது ஒன்றும் புதிதல்ல எமக்கு,
விழட்டும் எம்மேல் இந்த பழி,
கொட்டட்டும் உனது பொற்கிழி ...

கடைத்தொண்டன்,


கட்டுமரம்.

No comments:

Post a Comment