உடன் பிறப்பே,
நேற்றேழுதிய மடல் முற்றிலும் மை காயுமுன்னே, சற்றிலும் எதிர்பாராமல் இன்னொரு கயமை !!!
வந்தது தீர்ப்பா, தீர்வினையா அல்லது கழகத்துக்கு வந்த பெரும் வினையா என்று நீ அச்சப்படுவாயோ என்று எமக்கு எழுந்த கூச்சத்தால் எழுதிய மடல் இது.
திராவிடம் அனைத்தும் ஓரினம் என்று ஆரம்பித்த கழகம் இன்று வேரிடமாகி, திக்கி திளைத்து திசைமாறி தத்தளித்து அலைகிறதோ என்ற அச்சம் தோன்றுகிறது. தமிழினம் வேறு திராவிடவினம் வேறு என்று தீய சக்திகள் சொல்லுக்கு, வில்லு பாட்டுக்கு ஆடும் மதிகள் போல, அதி திராவிடர் சிலரே, நீதியரசர்களாக கயமை செய்வதை எப்படி (குடும்பம்) கழகம் தாங்கும் ?
ஐயகோ ! எதையும் தாங்கும் இதயம் இன்றிருந்தால் மீண்டும் தனது உறக்கத்தை வென்று போராட்டம் தொடங்கி, அம்மையார் கொக்கரிப்பதை வீரவாட்டம் செய்து அடக்கியிருக்காதா ? அத்தகைய கழகமேங்கே, ஐம்பெரும் தலைவரெங்கெ ?
இந்த இன்னல்களுக்கிடையே, அம்மையாரின் எடுபிடிகள் செய்த அலங்கோலங்களை நினைவு கொள்வோம், ஏழையின் சிரிப்பினிலே இறைவனை கண்ட கழகம், பால்குடங்களையும், காவடிகளையும், பல்வேறு தேரடிகளுக்கருகே கண்ட கேவலம் அனைவருக்கும் தெரியும். மசூதிகளையும், தேவாலயங்களையும் மட்டுமே அணுகியிருந்தால் அதிலுள்ள நியாயம் எமக்கு முழுவதுமாக புரிந்திருக்கும்.
மீண்டும், கொல்வோம் மறைகளை,
நினைவுகொள்வோம் கழக சூளுரைகளை.
இந்து எதிர்ப்பு மட்டுமே எமது சக்தி,
குடும்பத்துக்கு பக்தி
இதுவே கழகத்தின் அரசியல் யுக்தி,
இதனாலேயே இன்னாள் வரை எமக்கு முக்தி
என்பது உலகறிந்ததல்லவே !
மீண்டும் தமிழன் சோற்றால் அடித்த பிண்டமான அலங்கோலம், கண்டு கொக்கரிப்பவரின் குதூகலம், கேவலம்.
இது ஒன்றும் புதிதல்ல எமக்கு,
விழட்டும் எம்மேல் இந்த பழி,
கொட்டட்டும் உனது பொற்கிழி ...
கடைத்தொண்டன்,
கட்டுமரம்.
This is the title of my favorite news magazine program on American public radio that enriched and enlightened me during my life in the USA. My blog is a tribute to that program.
Monday, May 11, 2015
Sunday, May 10, 2015
Kalainga madal 6: On Jaya judgment in Karnata HC...
உடன்பிறப்பே,
இன்று நாள், தமிழகத்துக்கு பொன்னாளோ, மண்-நாளோ என்பதை கர்நாடக நீதியரசர்தான் தீர்மானிக்கவேண்டிய கேவலமான நிலையில் கழகம் இருப்பதை, காவிரிக்கு கையேந்தும் தமிழர்கள் நினைவு கொண்டு சிந்திக்கவேண்டும்.
நீதியரசர் - நீதியின் வழி நடந்து, அதை நிலைநாட்டி, மனுநீதி வழி நடப்போரை தண்டிப்பதே ஆதி-தமிழனின் இச்சை, கழகத்தின் ஒரே மூச்சு.
அம்மையார் குவித்ததோ பெரும் சொத்து, ஆனால் என்னிடம் உள்ளது வெறும் தயிர் மத்து
என்று பொய்யுரைத்ததை,
பேரியத்தின் சதியை மேரியின் வழி நடக்கும் உத்தமர் - நீதியரசர் தவறே என்றபிறகும்,
மேல்முறையிட்டு, வேல்மறை வழிபடும், குமாரசாமி வந்தபோதே எமக்கு சந்தேகமே.
ஆனால், "மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு" என்ற கொள்கை காரணமாக அடக்கம் கொண்டுள்ளதை, முடக்கம் என்று கயவர் சொல்வதை நம்பிடாதே.
எமது எதிர்பார்ப்பு, நல் தீர்ப்பு ! அது தமிழத்தை தர்மபுரியாக்குமா அன்றேல் மர்மபுரியாக்குமா என்று பார்க்க பொறுமை கொள்.
தமிழகத்து (கழகத்து) எதிர்காலம் குறித்து கவலையுடன்,
கடைத்தொண்டன்
கட்டுமரம்.
இன்று நாள், தமிழகத்துக்கு பொன்னாளோ, மண்-நாளோ என்பதை கர்நாடக நீதியரசர்தான் தீர்மானிக்கவேண்டிய கேவலமான நிலையில் கழகம் இருப்பதை, காவிரிக்கு கையேந்தும் தமிழர்கள் நினைவு கொண்டு சிந்திக்கவேண்டும்.
நீதியரசர் - நீதியின் வழி நடந்து, அதை நிலைநாட்டி, மனுநீதி வழி நடப்போரை தண்டிப்பதே ஆதி-தமிழனின் இச்சை, கழகத்தின் ஒரே மூச்சு.
அம்மையார் குவித்ததோ பெரும் சொத்து, ஆனால் என்னிடம் உள்ளது வெறும் தயிர் மத்து
என்று பொய்யுரைத்ததை,
பேரியத்தின் சதியை மேரியின் வழி நடக்கும் உத்தமர் - நீதியரசர் தவறே என்றபிறகும்,
மேல்முறையிட்டு, வேல்மறை வழிபடும், குமாரசாமி வந்தபோதே எமக்கு சந்தேகமே.
ஆனால், "மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு" என்ற கொள்கை காரணமாக அடக்கம் கொண்டுள்ளதை, முடக்கம் என்று கயவர் சொல்வதை நம்பிடாதே.
எமது எதிர்பார்ப்பு, நல் தீர்ப்பு ! அது தமிழத்தை தர்மபுரியாக்குமா அன்றேல் மர்மபுரியாக்குமா என்று பார்க்க பொறுமை கொள்.
தமிழகத்து (கழகத்து) எதிர்காலம் குறித்து கவலையுடன்,
கடைத்தொண்டன்
கட்டுமரம்.
Thursday, April 30, 2015
Kalaingar Madal 5: On Uthama Villain movie controversy...
உடன்பிறப்பே,
தம்பி கமலஹாசனின் படம் "உத்தமவில்லன்" நாளை வெளிவரவிருக்கிறது. இதை தடை செய்ய ஆரிய சக்திகள் முடிவு செய்திருக்கின்றன. இதை கழகத்தின் திராவிட சகோதரர்கள் ஒன்று திரண்டு வெகுண்டெழுந்து முறியடிக்கவேண்டும்.
இது என்ன விஸ்வரூபமா, உயிருக்கு பயந்து நான் மௌனம் காக்க ? இந்துக்கள் சகிப்புத்தன்மை உள்ளவர்கள் என்பது அறிந்து தந்தை பெரியார் வழியில், அனைவருக்கு அண்ணா நாமம் போடும் கழகம் இதை கைவிடலாமா ?
இப்போதுதான் நமது தமிழ் மொழி, இன, குல மானங்களையும், வீரங்களையும் காட்டும் தருணம் !
தம்பி கமலஹாசன் கழகக்கொள்கையிலிருந்து சற்றும் மாறாதவர். மனைவியிருந்தும் துணைவியரும்/கலவியரும் வாழ்வுக்கு தேவை என்பதை எப்போதோ உணர்ந்த பெருந்தகையல்லவே அவர் ?
"உத்தமவில்லன்" என்ற பெயரால் ஒருவேளை இது எமது சுயசரிதையோ என்று எண்ணி கலங்கிடாதே. இது நமக்கு முற்றிலும் இணக்கமான இந்து மதத்தை மட்டுமே பழிக்கும் படமென்று தம்பி விளக்கமளித்துள்ளார் எமக்கு ?
நேபாளத்தில் இயற்கையன்னையின் சீற்றத்தை எதிர்கொண்டவர் ஆதித்தமிழனை மதத்தால் அடிமையாக்கியர் என்பதை நினைவில் கொண்டு, கழகத்துக்கு திரும்பட்டும் -- உனது பொற்கிழி !!
கடைத்தொண்டன்
கட்டுமரம்.
தம்பி கமலஹாசனின் படம் "உத்தமவில்லன்" நாளை வெளிவரவிருக்கிறது. இதை தடை செய்ய ஆரிய சக்திகள் முடிவு செய்திருக்கின்றன. இதை கழகத்தின் திராவிட சகோதரர்கள் ஒன்று திரண்டு வெகுண்டெழுந்து முறியடிக்கவேண்டும்.
இது என்ன விஸ்வரூபமா, உயிருக்கு பயந்து நான் மௌனம் காக்க ? இந்துக்கள் சகிப்புத்தன்மை உள்ளவர்கள் என்பது அறிந்து தந்தை பெரியார் வழியில், அனைவருக்கு அண்ணா நாமம் போடும் கழகம் இதை கைவிடலாமா ?
இப்போதுதான் நமது தமிழ் மொழி, இன, குல மானங்களையும், வீரங்களையும் காட்டும் தருணம் !
தம்பி கமலஹாசன் கழகக்கொள்கையிலிருந்து சற்றும் மாறாதவர். மனைவியிருந்தும் துணைவியரும்/கலவியரும் வாழ்வுக்கு தேவை என்பதை எப்போதோ உணர்ந்த பெருந்தகையல்லவே அவர் ?
"உத்தமவில்லன்" என்ற பெயரால் ஒருவேளை இது எமது சுயசரிதையோ என்று எண்ணி கலங்கிடாதே. இது நமக்கு முற்றிலும் இணக்கமான இந்து மதத்தை மட்டுமே பழிக்கும் படமென்று தம்பி விளக்கமளித்துள்ளார் எமக்கு ?
நேபாளத்தில் இயற்கையன்னையின் சீற்றத்தை எதிர்கொண்டவர் ஆதித்தமிழனை மதத்தால் அடிமையாக்கியர் என்பதை நினைவில் கொண்டு, கழகத்துக்கு திரும்பட்டும் -- உனது பொற்கிழி !!
கடைத்தொண்டன்
கட்டுமரம்.
Monday, April 13, 2015
Kalaingar Madal 4: Parody on Tamil New Year..
நாளை எதோ விடுமுறை நாளாம், சில ஆரிய சக்திகள், குல்லுக பட்டரின் வழி
நடந்து இப்போது திக்கி திசை மாறி தத்தளிக்கும் வேளையில், இதை தமிழ்
புத்தாண்டு என்று அறிவித்து கொண்டாடுவது வேதனையிலும் வேதனை ! இதற்கு சில
கோடாரிக்காம்புகள் துணை போவது இன்னும் கொடிது. மன்மத வருடம் என்பதாலேயே எமது நல்லிணக்கம் இதற்க்கு உண்டு.
இந்த இன்னலுக்கிடையே, தம்பி வீரமணியின் பேரியக்கம் தமிழை வாழவைக்க, தமிழினம் தழைக்க, இனமானம் காக்க, மத நல்லிணக்கம் சிறக்க, சில பெண்கள் அணியும் எதோ ஓர் அணிகலன் ஒன்றை நீக்கபோவதாக அறிவித்திருக்கிறது. அதை கழகரீதியாக ஆதரிக்க மனம்விரும்பினாலும், மனைவியரும், துணைவியரும், இணைவியரும் மிக நிறைந்த குடும்பமல்லவே என்று நினைத்து, கட்டுக்கடங்காத சிட்டுக்குருவி போல் சிறகடிக்கும் மனதிற்கு கடிவாளமிட்டிருக்கிறேன்.
இதை பார்ப்பனீய சக்திகள், வோட்டுபயம் என்று கொக்கரிப்பதை நீ நம்பி விடாதே. இன்று வரை வீட்டுப் பெண்களுக்கு கழுத்தில் தாலி, வெளியோருக்கு பகுத்தறிவு வேலி என்று சற்றும் பிழறாத நடை எமதல்லவெ.
எங்கே உனது பொற்கிழி என்று மனம் விழையுமுன்னே நீ கொள்கை காக்க இரண்டு கோடி கொட்டியதை, கொள்ளை காப்போருக்கு நிதி தேவையா என்று தீய சக்திகள் புலம்புவதை நம்பிவிடாதே !
கடைதொண்டன்,
கட்டுமரம்.
இந்த இன்னலுக்கிடையே, தம்பி வீரமணியின் பேரியக்கம் தமிழை வாழவைக்க, தமிழினம் தழைக்க, இனமானம் காக்க, மத நல்லிணக்கம் சிறக்க, சில பெண்கள் அணியும் எதோ ஓர் அணிகலன் ஒன்றை நீக்கபோவதாக அறிவித்திருக்கிறது. அதை கழகரீதியாக ஆதரிக்க மனம்விரும்பினாலும், மனைவியரும், துணைவியரும், இணைவியரும் மிக நிறைந்த குடும்பமல்லவே என்று நினைத்து, கட்டுக்கடங்காத சிட்டுக்குருவி போல் சிறகடிக்கும் மனதிற்கு கடிவாளமிட்டிருக்கிறேன்.
இதை பார்ப்பனீய சக்திகள், வோட்டுபயம் என்று கொக்கரிப்பதை நீ நம்பி விடாதே. இன்று வரை வீட்டுப் பெண்களுக்கு கழுத்தில் தாலி, வெளியோருக்கு பகுத்தறிவு வேலி என்று சற்றும் பிழறாத நடை எமதல்லவெ.
எங்கே உனது பொற்கிழி என்று மனம் விழையுமுன்னே நீ கொள்கை காக்க இரண்டு கோடி கொட்டியதை, கொள்ளை காப்போருக்கு நிதி தேவையா என்று தீய சக்திகள் புலம்புவதை நம்பிவிடாதே !
கடைதொண்டன்,
கட்டுமரம்.
Friday, April 10, 2015
Kalaignar madal parody - 3 on Dayalu's memory loss defense in 2g case.. (in Tamil)
உடன்பிறப்பே,
என்னிணைவி தன்னினைவு இல்லை என்று கூறியதை
ஏதோ செய்யாத ஊழல் வழக்கிலிருந்து தப்பிக்க செய்யும் சதியென்று
பச்சை தமிழச்சியை தாய்க்குலத்தை
கொச்சை படுத்தி வசை பாடும் கயவரின்
இச்சை என்ன என்ற கேள்வி மனதில் எப்போதும் எழுவதை
துச்சைப்படுத்தி கல்லாக்கி வரைந்த மடலிது.
மனிதனின் ஆறாம் அறிவோடு சிந்தித்தாலே
சந்தி சிரிக்கும் படி உள்ள கழகத்தோரை
இன்னமும் கீழ் நிலைக்கு கொண்டு செல்ல,
ஏழாம் அறிவு வேண்டும் என்று படம் எடுத்த கயவரின்,
கஜினி-யின் நாயகன் நினைவிழந்தபோது
அதை ஆர்பரித்து வரவேற்ற கூட்டம்
இன்று எத்தனையோ பால் கணக்கெல்லாம் நினைவிருந்தும்
ஒரே ஒரு தொலைக்காட்சியின் சற்றே சிறு இருநூறு கோடிகளை மட்டும் எமது நாயகி மறந்ததை கயமை என்பது
பார்ப்பனீயத்தின் சதி என்பது
அகநானூறு மற்றும் புறநானூறு படித்த பச்சை தமிழன்
அறிந்து கொள்ளமாட்டான் என்ற மூடநம்பிக்கை தானே.
எடு உன் போர்வாளை
முகத்திரையைக் கிழி
புடைக்கட்டும் உன் திண்தோள்
நீ ஓடிவருமுன்னே ஒலிக்கட்டும்
உன் பொற்கிழியின் சத்தம்
சிந்தட்டும் இரத்தம் !!!
கடைத்தொண்டன்
கட்டுமரம்.
என்னிணைவி தன்னினைவு இல்லை என்று கூறியதை
ஏதோ செய்யாத ஊழல் வழக்கிலிருந்து தப்பிக்க செய்யும் சதியென்று
பச்சை தமிழச்சியை தாய்க்குலத்தை
கொச்சை படுத்தி வசை பாடும் கயவரின்
இச்சை என்ன என்ற கேள்வி மனதில் எப்போதும் எழுவதை
துச்சைப்படுத்தி கல்லாக்கி வரைந்த மடலிது.
மனிதனின் ஆறாம் அறிவோடு சிந்தித்தாலே
சந்தி சிரிக்கும் படி உள்ள கழகத்தோரை
இன்னமும் கீழ் நிலைக்கு கொண்டு செல்ல,
ஏழாம் அறிவு வேண்டும் என்று படம் எடுத்த கயவரின்,
கஜினி-யின் நாயகன் நினைவிழந்தபோது
அதை ஆர்பரித்து வரவேற்ற கூட்டம்
இன்று எத்தனையோ பால் கணக்கெல்லாம் நினைவிருந்தும்
ஒரே ஒரு தொலைக்காட்சியின் சற்றே சிறு இருநூறு கோடிகளை மட்டும் எமது நாயகி மறந்ததை கயமை என்பது
பார்ப்பனீயத்தின் சதி என்பது
அகநானூறு மற்றும் புறநானூறு படித்த பச்சை தமிழன்
அறிந்து கொள்ளமாட்டான் என்ற மூடநம்பிக்கை தானே.
எடு உன் போர்வாளை
முகத்திரையைக் கிழி
புடைக்கட்டும் உன் திண்தோள்
நீ ஓடிவருமுன்னே ஒலிக்கட்டும்
உன் பொற்கிழியின் சத்தம்
சிந்தட்டும் இரத்தம் !!!
கடைத்தொண்டன்
கட்டுமரம்.
Kalaingar madal on Crooks gunned down in AP jungles by police...
உடன் பிறப்பே,
ஐயகோ என இதயம் துடிக்கிறது!
உணர்வுகள் பொங்குகின்றன!
திராவிட குலத்தினை பிளவு செய்ய ஆரிய சக்திகள் ஒன்று கூடி செய்த சதியால்,
ஆந்திர மாநிலத்தில் காடுகளில் ஓடிவிளையாடும் இனமானமுள்ள "மர-தமிழர்களை" சிட்டுக்குருவியைப்போல்
சுட்டுசாய்த்த பேடிகள் - திராவிடர்கள் என்பது வேதனைக்குரியது.
இந்த வேதனையை, தமிழ்நாட்டில் உள்ள ஜவ்வாது மலையை அழித்த வீரத்தமிழன் எப்படி பொறுக்க முடியும் ?
இந்தநேரத்தில் ஆண்டாண்டுகாலமாக கழக்காவலர்கள் கடிதம் மட்டும் எழுதும்
தொன்று தொட்ட பழக்கத்தை
இன்று கெடுத்து ஆட்சி செய்யும் கேவலர்கள்
"மக்களின் முதல்வர் ஆட்சி" என்று பறை சாற்றும் கேடு தமிழகத்துக்கு தேவைதானா என்று
மந்திபோலில்லாமல்
சிந்திக்கவேண்டுமல்லவா ?
திரள்வீர், முழங்கட்டும் பறைகள், கொட்டட்டும் பொற்கிழிகள்....
கட்டுமரம்.
ஐயகோ என இதயம் துடிக்கிறது!
உணர்வுகள் பொங்குகின்றன!
திராவிட குலத்தினை பிளவு செய்ய ஆரிய சக்திகள் ஒன்று கூடி செய்த சதியால்,
ஆந்திர மாநிலத்தில் காடுகளில் ஓடிவிளையாடும் இனமானமுள்ள "மர-தமிழர்களை" சிட்டுக்குருவியைப்போல்
சுட்டுசாய்த்த பேடிகள் - திராவிடர்கள் என்பது வேதனைக்குரியது.
இந்த வேதனையை, தமிழ்நாட்டில் உள்ள ஜவ்வாது மலையை அழித்த வீரத்தமிழன் எப்படி பொறுக்க முடியும் ?
இந்தநேரத்தில் ஆண்டாண்டுகாலமாக கழக்காவலர்கள் கடிதம் மட்டும் எழுதும்
தொன்று தொட்ட பழக்கத்தை
இன்று கெடுத்து ஆட்சி செய்யும் கேவலர்கள்
"மக்களின் முதல்வர் ஆட்சி" என்று பறை சாற்றும் கேடு தமிழகத்துக்கு தேவைதானா என்று
மந்திபோலில்லாமல்
சிந்திக்கவேண்டுமல்லவா ?
திரள்வீர், முழங்கட்டும் பறைகள், கொட்டட்டும் பொற்கிழிகள்....
கட்டுமரம்.
Thursday, April 2, 2015
Kalaingarin Madal in Murasoli (fiction)... on Good Friday...
Let
us try to guess How MuKoo will be feeling now.. This is a work of
fiction, my own creation. Any resemblance to living or dead means you
have been anointing crooks as politcos/leaders/CMs. Mistake is all
yours...
---------------------------------------------------------------------
உடன்பிறப்பே,
நாளை புனிதவெள்ளித்திருநாள். எப்படி இந்நாளில் மற்றவர் கயமைக்காக தன்னுயிர் துறந்த கடவுள் போல, குடும்ப கொள்ளைகளுக்காக என்னை தியாகம் செய்யச்சொல்வது கயமையல்லவே !
---------------------------------------------------------------------
உடன்பிறப்பே,
நாளை புனிதவெள்ளித்திருநாள். எப்படி இந்நாளில் மற்றவர் கயமைக்காக தன்னுயிர் துறந்த கடவுள் போல, குடும்ப கொள்ளைகளுக்காக என்னை தியாகம் செய்யச்சொல்வது கயமையல்லவே !
பார்ப்பனீயம் இன்று "இரங்கராஜன் பாண்டே" என்று புதிய பெயரெடுத்து வலைத்தளம்
முழுவதிலும் அரக்க ஆட்டம் ஆடுவதை நீ புரிந்து கொண்டிருப்பாய் என்பதில்
எனக்கு நம்பிக்கை உண்டு.
இன்று, திராவிட சகோதர்களான மாறன்களை, ஆதிக்கவர்க்க அமலாக்கத்துறை மூலம், கடிவாளமிட்டு, அலங்கோலம் செய்துவிட திட்டமிட்டிருக்கும் புதிய ஆரிய சக்திகளை நீ கண்டு கொள்ள வேண்டும்.
இந்த இடர்களுக்கிடைய, நீ பொற்கிழியோடு, கழக தேர்தல் நிதிக்காக ஓடி வரும் காட்சி இனிதிலும் இனியது. கண்கள் பனிக்கின்றன, நெஞ்சம் பதைக்கிறது, நாத்தழுதழுக்கின்றது.
இதை அடுத்தது நான் தான் என்கிற அச்சத்தினால்தான் என்று, தீய சக்திகள் சொல்வதை நீ நம்பிவிடாதே, நெஞ்சம் வெம்பிவிடாதே...
எத்தனையோ இடர்களுக்கிடையே இன்று வரையில், இந்து மதத்துக்கு பகுத்தறிவு, குடும்பத்துக்கு பணத்தறிவு, மற்ற மதங்களுக்கு வோட்டறிவு என்ற கழககொள்கையிலிருந்து சற்றும் சறுக்காத இந்த கடைத்தொண்டனை கயவர்கள் வசை பாடுவதை நீ புரிந்து கொள்வாய்.
கட்டுமரம்.
------------------------------------------------------------------------
(Image courtesy, thuglak fan group)
இன்று, திராவிட சகோதர்களான மாறன்களை, ஆதிக்கவர்க்க அமலாக்கத்துறை மூலம், கடிவாளமிட்டு, அலங்கோலம் செய்துவிட திட்டமிட்டிருக்கும் புதிய ஆரிய சக்திகளை நீ கண்டு கொள்ள வேண்டும்.
இந்த இடர்களுக்கிடைய, நீ பொற்கிழியோடு, கழக தேர்தல் நிதிக்காக ஓடி வரும் காட்சி இனிதிலும் இனியது. கண்கள் பனிக்கின்றன, நெஞ்சம் பதைக்கிறது, நாத்தழுதழுக்கின்றது.
இதை அடுத்தது நான் தான் என்கிற அச்சத்தினால்தான் என்று, தீய சக்திகள் சொல்வதை நீ நம்பிவிடாதே, நெஞ்சம் வெம்பிவிடாதே...
எத்தனையோ இடர்களுக்கிடையே இன்று வரையில், இந்து மதத்துக்கு பகுத்தறிவு, குடும்பத்துக்கு பணத்தறிவு, மற்ற மதங்களுக்கு வோட்டறிவு என்ற கழககொள்கையிலிருந்து சற்றும் சறுக்காத இந்த கடைத்தொண்டனை கயவர்கள் வசை பாடுவதை நீ புரிந்து கொள்வாய்.
கட்டுமரம்.
------------------------------------------------------------------------
(Image courtesy, thuglak fan group)
Subscribe to:
Posts (Atom)